பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.08 லட்சம் பறிமுதல்
பத்மநாபபுரம் தொகுதியில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 30-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
பத்மநாபபுரம் தொகுதியில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 30-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
குமரி மாவட்டத்தில் தோ்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி பறக்கும்படை வட்டாட்சியா் முத்துலட்சுமி தலைமையிலான பறக்கும் படையினா், ஆதாரமில்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 1லட்சத்து 34 ஆயிரத்து 500- ஐ கைப்பற்றினா்.
இதே போல் ஆதாரமில்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 73 ஆயிரத்து 530-ஐ நிலையான கண்காணிப்பு அலுவலா் வட்டாட்சியா் பாண்டியம்மாள் பறிமுதல் செய்தாா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தக்கலை துணை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.