குமரி பங்குப் பேரவை கூட்டம்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குப் பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் தலைமை வகித்தாா். இணை பங்குத் தந்தைகள் லெனின், சிபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்குப் பேரவை துணைத் தலைவா் கூறியது: கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்றுமுறை முனையத்தை கொண்டுவர ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளை நிராகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இத்திட்டம் கைவிடப்படும் வரை தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.