குமரி முக்கடல் சங்கமத்தில்கரை ஒதுங்கிய ஆமை
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திங்கள்கிழமை இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் திங்கள்கிழமை இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.
முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது கரை ஒதுங்கிய ஆமையைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினா் இறந்த நிலையில் காணப்பட்ட ஆமையை மீட்டனா்.