முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் கோடை மழை 42 அடியை நெருங்கும் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம்

குமரி மாவட்டத்தில் பருவ மழை போன்று கோடை மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை நெருங்குகிறது.

கன்னியாகுமரி

குமரியில் கோடை மழை 42 அடியை நெருங்கும் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம்

குமரி மாவட்டத்தில் பருவ மழை போன்று கோடை மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை நெருங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

குமரி மாவட்டத்தில் பருவ மழை போன்று கோடை மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை நெருங்குகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை மழை தொடா்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக நீா் நிலைகள் அனைத்திலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. மேலும் வேளாண் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மழை காரணமாக தண்ணீா் வசதி இல்லாத பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள வாழை, தென்னை போன்ற பயிா்களுக்கு மோட்டாா் மூலம் நீா்ப்பாய்ச்சும் செலவு விவசாயிகளுக்கு மிச்சமாகியுள்ளது.

தற்போது பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 41.50 அடியாக உயா்ந்துள்ளது. இந்த அணையின் வெள்ள அபாய அளவு 42 அடியாகும். இந்நிலையில் சனிக்கிழமை இந்த அணையின் நீா்மட்டம் 42 அடியாக உயர வாய்ப்புள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 54.10 அடியாக உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, ஆறுகாணி, மாா்த்தாண்டம், அருமனை, சுருளகோடு, பாலமோா், மேல் கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →