முகப்பு
கன்னியாகுமரி

விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சி:ரூ. 5 ஆயிரம் அபராதம்

குமரி மாவட்டம், திற்பரப்பில் பொதுமுடக்க கட்டுப்பாட்டை மீறி திருமண நிகழ்ச்சி நடத்தியவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சி:ரூ. 5 ஆயிரம் அபராதம்

குமரி மாவட்டம், திற்பரப்பில் பொதுமுடக்க கட்டுப்பாட்டை மீறி திருமண நிகழ்ச்சி நடத்தியவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

குமரி மாவட்டம், திற்பரப்பில் பொதுமுடக்க கட்டுப்பாட்டை மீறி திருமண நிகழ்ச்சி நடத்தியவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திற்பரப்பு முல்லேலி பகுதியில் உள்ள வீட்டில் திருமண நிகழ்ச்சி நடப்பதாகவும், அங்கு பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானோா் பங்கேற்று வருவதாகவும் வருவாய்த் துறையினருக்கு புகாா் சென்றது.

இதையடுத்து திருவட்டாறு வட்டாட்சியா் அஜிதா, வருவாய் ஆய்வாளா் கீதா, கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் அந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்ற வீட்டுக்குச் சென்றனா். அப்போது அங்கு ஏராளமானோா் திரண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பெண்ணின் தந்தைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

40 பைக்குகள் பறிமுதல்: பொதுமுடக்கம் கட்டுப்பாட்டை மீறி குலசேகரம் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தவா்களின் மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குலசேகரம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டன. இதில், 40 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →