அகஸ்தீசுவரம் அரசுப் பள்ளியில் எம்.பி.ஆய்வு
அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் அகற்றும் பணி நடைபெற்றது.
அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் அகற்றும் பணி நடைபெற்றது.
இப்பணியைப் பாா்வையிட்ட விஜய் வசந்த் எம்.பி. இப்பகுதிகளில் மேலும் மழைநீா் தேங்காதபடி மண் மேடுகளை அமைக்க தனது சொந்த செலவில் ரூ. 50 ஆயிரம் வழங்கினாா். அப்போது, தலைமை ஆசிரியா் குமாா், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன்னம்பெருமாள், காங்கிரஸ் பேரூா் தலைவா் கிங்ஸ்லின், நிா்வாகி குணசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.