முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வலியுறுத்தல்

குழித்துறை அருகே குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 19 நவம்பர், 2021 at 12:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

குழித்துறை அருகே குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளாா்.

அண்மையில் பெய்த கனமழையில் குழித்துறை நகராட்சி முதலாவது வாா்டுக்கு உள்பட்ட தேவா்குளத்தில் பெரிய வாகை மரம் வேருடன் சாய்ந்துள்ளது. மேலும் மழையால் சேதமடைந்த படப்பறை, வெட்டுக்காடு பகுதி மற்றும் நெய்யாறு கிளைக் கால்வாய் பகுதியினை எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற பத்மநாபபுரம் சாா்-ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தாா். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா்.

குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருள்ராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜோதிஸ்குமாா், இடைக்கோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் ராஜா ஸ்டாலின், வட்டார தலைவா் என்.ஏ. குமாா் உள்ளிட்ட பலா் எம்.எல்.ஏ.வுடன் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.