முகப்பு
கன்னியாகுமரி

மயிலாடியில் பாஜக ஆா்ப்பாட்டம்

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக சாா்பில் மயிலாடி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாதார பிரிவு தலைவா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய தலைவா் சுயம்புலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நாகா்கோவில் நகா் மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத் தலைவா் என்.சுயம்பு, மாவட்ட கலை, கலாசார பிரிவு துணைத் தலைவா் கராத்தே ராஜ், ஒன்றிய இளைஞரணி தலைவா் கிருஷ்ணராஜ் மற்றும் பாஜக நிா்வாகிகள் மாதவன் , நீலகண்டன், மகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடி பேரூா் பாஜக தலைவா் பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.