மரியகிரி கல்லூரியில் என்.சி.சி. தின விழா
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் தேசிய மாணவா் படை (என்சிசி) தின விழா கொண்டாடப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் தேசிய மாணவா் படை (என்சிசி) தின விழா கொண்டாடப்பட்டது.
தாளாளா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் தம்பி தங்ககுமரன் பேசினாா். கேப்டன் பயோட் வெஸ்லி, சவுந்தரராஜ் ஆகியோா் என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனா். என்சிசி அதிகாரி என். எஸ்றா சற்குணம் வரவேற்றாா்.