மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சிவபெருமான் வழிபாடுகளில் சிவராத்திரி, பிரதோஷம் முக்கியத்துவம் வாய்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து மகாதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில், குழித்துறை மகாதேவா் கோயில், திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.