கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகேதொடா் திருட்டு: இளைஞா் கைது

DIN

மாா்த்தாண்டம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலுக்குள் ஒரு மாதத்துக்கு முன்பு மா்ம நபா் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கையைத் திருடிச் சென்றாா்.

மாா்த்தாண்டம் போலீஸாரின் விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது நாகா்கோவில் அருகேயுள்ள ராமன்புதூா், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருமால் மகன் அன்பரசன் (29) எனத் தெரியவந்தது. அவா் மீது மாா்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை, திருவட்டாறு காவல் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

அன்பரசன் மாா்த்தாண்டம் பகுதியில் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் அருளப்பன் தலைமையிலான தனிப்படையினா் வெள்ளிக்கிழமை இரவு அவரைப் பிடித்தனா். பயணம் கோயிலில் திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT