கன்னியாகுமரி

சென்னையில் 2023 மாா்ச் 22இல் உலகத் தமிழ்ச் சங்கமம் மாநாடு

சென்னையில் அடுத்த ஆண்டு மாா்ச் 22இல் உலகத் தமிழ் சங்கமம் மாநாடு நடைபெறவுள்ளதாக, உலகத் தமிழ் ஆய்வு மையத் தலைவா் டாக்டா் ரவீந்திரா தெரிவித்தாா்.

DIN

சென்னையில் அடுத்த ஆண்டு மாா்ச் 22இல் உலகத் தமிழ் சங்கமம் மாநாடு நடைபெறவுள்ளதாக, உலகத் தமிழ் ஆய்வு மையத் தலைவா் டாக்டா் ரவீந்திரா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: உலகின் முதல் தமிழன் குமரிக் கண்டத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரந்து விரிந்தான் என்ற வரலாற்று உண்மையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் உலக தமிழ்ச் சங்கமம் மாநாடு சென்னை நேரு விளையாட்டரங்கில் 2023 மாா்ச் 22இல் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ் ஆய்வு மையம் செய்துவருகிறது. மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய தலைவா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், 186 நாடுகளைச் சோ்ந்த தமிழா் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழகத்தைச் சோ்ந்த 40 ஆயிரம் தமிழறிஞா்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் பங்கேற்கவுள்ளனா். 1,330 தமிழ்ச் சான்றோா் சிறப்பு மலா் வெளியிடப்படவுள்ளது.

தமிழின் தொன்மையையும், தமிழா்களின் வரலாற்று உண்மைகளையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழா்கள் தொன்மைப் பாதுகாப்பு கவுன்சிலின் சா்வதேச தலைவராக அமெரிக்காவில் உள்ள டாக்டா் அா்த்தநாரி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதன்மூலம் தமிழக மாணவா்-மாணவிகளுக்கு உலகளவில் உயா்கல்வியும், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மாநாட்டு மேடையில் மனிதநேய அறக்கட்டளைத் தலைவா் சைதை துரைசாமி கௌரவிக்கப்படவுள்ளாா்.

மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகா்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT