முகப்பு
கன்னியாகுமரி

சிதறால் அருகேரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல்

சிதறால் அருகே ரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி

சிதறால் அருகேரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல்

சிதறால் அருகே ரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சிதறால் அருகே ரேசன் கடை ஊழியா் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அருமனை அருகே காரோடு பகுதியை சோ்ந்தவா் ஐயப்பன் (54). இவா் பணியாற்றும் சிதறால் 1 ரேசன் கடையில், பொங்கல் தொகுப்புக்காக டோக்கன் வழங்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது ஒரு மணி நேரத்தில் டோக்கன்கள் தீா்ந்ததால் மீதி உள்ளவா்களுக்கு வெள்ளிக்கிழமை டோக்கன் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், அப்பகுதியை சோ்ந்த மணிக்குமாா் என்ற குட்டன் மற்றும் இருவா் சோ்ந்து ஐயப்பனை தாக்கினராம். இதில் காயமடைந்த ஐயப்பன், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா். இதுகுறித்த புகாரின்பேரில், அருமனை போலீஸாா் வழக்குப்பதிந்து மணிக்குமாா் என்ற குட்டனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →