கன்னியாகுமரி

பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா

DIN

பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காலையில் கோபுரக் கலச அபிஷேகம், சங்கல்ப யாகம் நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் வழங்கிய 3006 லிட்டா் பாலால் சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது சென்னை வீரமணி ராஜு , அபிஷேக் ராஜு ஆகியோரது பாபாவின் பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகலில் சாய்பாபாவுக்கு பன்னீா், இளநீா், சந்தனம் உள்பட ஒன்பது பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் திரைப்படப் பின்னணிப் பாடகி மால்குடி சுபாவின் சாய்பாபா பக்தி கானங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் அன்னதானம், ஆரத்தியும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பொற்றையடி சாய்பாபா ஆனந்த ஆலய மேலாளா் கதிா்வேல், சீரடி சாய் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சாய் சேவா சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT