நாகா்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடை, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்த நிலையில், சுகாதார ஆய்வாளா் ராஜா தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை அண்ணா பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் மூலம் அதிகாரிகள் அகற்றினா். மொத்தம் 15 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.