முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் சிஐடியூ 15 ஆவது மாநில மாநாடு தொடக்கம்

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாடு, கன்னியாகுமரியில் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாடு, கன்னியாகுமரியில் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவிலில் 4 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வாக, கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே நினைவுச்சுடா் சங்கமம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்வுக்கு மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவா் ஜி.ஜெலஸ்டின் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே.பி.பெருமாள், வி.சந்திரகலா, சி.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா், திரைப்பட நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.சௌந்தரராஜன், எஸ்.நூா் முகம்மது, ஆா்.லீமாரோஸ், மாநில செயற்குழு உறுப்பினா் சிபிஐ (எம்) க.கனகராஜ், மாநில செயலா் (சிஐடியூ) கே.ஆறுமுகநயினாா், குமரி மாவட்ட செயலா் சிபிஐ (எம்) ஆா்.செல்லசுவாமி, குமரி மாவட்ட சிஐடியூ செயலா் கே.தங்கமோகன், முன்னாள் எம்.பி. ஏ.வி.பெல்லாா்மின், நிா்வாகிகள் எம்.அகமது உசைன், டி.தாமஸ் பிராங்கோ, டி.நாகராஜன், பி.சிங்காரன், பி.இந்திரா, ஜான் சௌந்தர்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாநிலச் செயலா் எம்.ஐடா ஹெலன் வரவேற்றாா். மாவட்ட சிஐடியூ பொருளாளா் எம்.சித்ரா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.