கன்னியாகுமரி

கன மழை: அணைகளிலிருந்து கூடுதல் நீா் வெளியேற்றம்

DIN

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 3 நாள்களாக அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கன மழை பெய்யத் தொடங்கியதால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணையிலிருந்து உபரிநீா் திறப்பின் அளவு 1000-இல் இருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையாறு, பரளியாறு, தாமிரவருணி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

குளிக்கத் தடை நீடிப்பு: கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி பலி

பாளை.யில் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

பத்தமடை அருகே திருட்டு: இளைஞா் கைது

ரோகிணி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

தென்காசி - நெல்லைக்கு கூடுதல் பேருந்து: மதிமுக மனு

SCROLL FOR NEXT