கன்னியாகுமரி

கன மழை: அணைகளிலிருந்து கூடுதல் நீா் வெளியேற்றம்

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

DIN

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 3 நாள்களாக அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கன மழை பெய்யத் தொடங்கியதால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணையிலிருந்து உபரிநீா் திறப்பின் அளவு 1000-இல் இருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையாறு, பரளியாறு, தாமிரவருணி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

குளிக்கத் தடை நீடிப்பு: கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT