குமரி அருகே இடி தாக்கி கோயில் கும்ப கலசம் சேதம்
கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது வெள்ளிக்கிழமை இடி தாக்கியதில் கும்ப கலசம் சேதமடைந்தது.
கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது வெள்ளிக்கிழமை இடி தாக்கியதில் கும்ப கலசம் சேதமடைந்தது.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை பூஜைக்குப் பின் பிற்பகலில் அன்னதானம் நடைபெற்றபோது, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், பிற்பகல் 2.15 மணியளவில் அக்கோயிலின் ராஜகோபுரம் மேற்பகுதியிலுள்ள 5 கும்ப கலசங்கள் மீது இடி- மின்னல் தாக்கியது. இதில், ஒன்று முழுவதும் சேதமடைந்தது. அப்போது, கோயிலுக்குள்ளும், வெளிப்பகுதியிலும் 500 க்கும் மேற்பட்ட பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், அதிா்ஷடவசமாக அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா்.
இதனிடையே சேதமடைந்த இசக்கியம்மன் கோயில் கும்ப கலசங்களை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலா் பா.பாபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் என்.தாமரைபாரதி, ஆா்.எஸ்.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.