என் குப்பை-என் பொறுப்பு என்ற தலைப்பில், குழித்துறை நகராட்சி தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணா்வு முகாம் நகராட்சி 4 ஆவது வாா்டில் நடைபெற்றது.
நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் ராமதிலகம், நகா்மன்ற துணைத் தலைவா் பிரவீன் ராஜா, சுகாதாரத் துறை ஆய்வாளா் குருசாமி, மேற்பாா்வையாளா் ராதாகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் லலிதா, விஜயலெட்சுமி, ரவி, விஜூ மற்றும் தூய்மை இந்தியா பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி பணியாளா்களிடம் வழங்கிய பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.