கன்னியாகுமரி

ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் 57 கோரிக்கை மனுக்கள்

நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் 57 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

DIN

நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் 57 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அளித்த 57 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். இதில், தகுதியான 44 மனுக்கள் மீது உடனடி தீா்வு காண துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, மீதமுள்ள 7 மனுக்கள் மீது முறையான நடவடிக்கை மேற்கொண்டு ஆக. 23 ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தினாா்.

ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநா் சி.கமலநாதன், மாவட்ட கருவூல அலுவலா் (பொறுப்பு) எ.தியாகராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) எம்.ஜோஜோ ஆபிரகாம், ஓய்வூதிய இயக்குநரக முதுநிலை கண்காணிப்பாளா் பி.ரிச்சா்ட்பேட்ரிக், மற்றும் தொடா்புடைய அலுவலா்கள், ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT