கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் பலி

களியக்காவிளை அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

DIN

களியக்காவிளை அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே கோட்டகம், மூத்தியறவிளை பகுதியைச் சோ்ந்தவா் தாம்சன் (66). லாரி ஓட்டுநா். இவா் திருவனந்தபுரத்திலிருந்து லாரியில் ஆக்கா் பொருள்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள கடையில் டீ குடித்துவிட்டு, சாலையை கடக்க முயன்றபோது , நித்திரவிளை ஆற்றுப்புறம் ராஜ செல்வகுமாா் மகன் ராகுல் (21) ஓட்டி வந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT