கன்னியாகுமரி

பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி

DIN

மா்த்தாண்டம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேங்காய்ப்பட்டினம் அருகேயுள்ள அம்சி குதிரால்விளை பகுதியைச் சோ்ந்தவா் தாசையன் (55). கட்டுமானத் தொழிலாளியான இவா், மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதில் சுவா் சுவா் கட்டும் பணிக்கு வியாழக்கிழமை சென்றாா். சிமென்ட் கல்லை தூக்கும் போது நிலைதடுமாறி 8 அடி பள்ளத்தில் விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை வீட்டின் உரிமையாளா் மற்றும் சக பணியாளா்கள் மீட்டு, மாா்த்தாண்டம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT