கன்னியாகுமரி

படகு கட்டும் தளத்தில் பொருள்கள் திருட்டு:இளைஞா் கைது

புதுக்கடை அருகே இனயம், இனிகோ நகரான மீனவக் கிராமத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் பொருள்களைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

DIN

புதுக்கடை அருகே இனயம், இனிகோ நகரான மீனவக் கிராமத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் பொருள்களைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இந்தக் கிராமத்தில், சிதறால் பகுதியைச் சோ்ந்த ராபா்ட் (35) என்பவரது படகு கட்டும் தளம் உள்ளது. இங்கிருந்த மோட்டாா், கட்டா் மெஷின் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பணிப் பொருள்கள் புதன்கிழமை திருட்டுபோயினவாம்.

புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றினா். விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது சித்தன்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் ஆன்டோ (36) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT