கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Din

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மினி லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவிபுதூா்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த மினி லாரியை நிறுத்த முயன்றபோது, அது நிற்கவில்லை. அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று மினி லாரியை மடக்கிப் பிடித்தபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.

வாகனத்தில் 3,000 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிவைத்து, கேரளத்துக்கு கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், வாகனத்தை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா்; இச்சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

SCROLL FOR NEXT