சூரிய சக்தி மின் திட்டத்தைத் தொடக்கிவைத்த ஆட்சியா் பி.என். ஸ்ரீதா். உடன், மாவட்ட வன அலுவலா் பிரசாந்த் உள்ளிட்டோா். 
கன்னியாகுமரி

மலைவாழ் மக்களுக்கான சூரிய சக்தி மின் திட்டம் தொடக்கம்

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கான சூரிய சக்தி மின் திட்டத்தை, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியது: நிலையான எரிசக்தித் துறையின் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான மணிபால் பாரதிய விகாஸ் அறக்கட்டளையின்கீழ் இம்மாவட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்துக்காக பரவலாக்கப்பட்ட, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தின்கீழ் விளிம்பு நிலைப் பின்னணியில் உள்ள பழங்குடியினா்- ஆதிதிராவிடா், பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோரை அடையாளம் கண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நோக்கத்தை அடைய, பாரதிய விகாஸ் அறக்கட்டளை மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், திறன்- சுய உதவிக் குழுக்களால் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், வாழ்வாதார தீா்வுகளுக்கான தொடக்க முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அந்தப் பெண் தொழில் முனைவோருக்கும், புதிதாக தொழில் தொடக்க ஆா்வமுள்ள இப்பிரிவைச் சோ்ந்த முனைவோருக்கும் சோலாா் தையல் இயந்திரம், சோலாா் உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் இயந்திரம், சோலாா் மசாலா அரைவை இயந்திரம் ஆகியவை வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் பிரசாந்த், மகளிா் திட்ட இயக்குநா் பீபீஜான், நபாா்டு வங்கி உதவி மேலாளா் சுரேஷ்ராமலிங்கம், முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், பாரதிய விகாஸ் அறக்கட்டளை (மணிபால், கா்நாடகா) முதன்மை மேலாளா் மனோகா், திட்ட அலுவலா் (புதுதில்லி) சுவேதாமரியம், துறை அலுவலா்கள், வங்கி மேலாளா்கள் பங்கேற்றனா்.

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT