FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டின் முன்பகுதி இடித்து அகற்றம்

19 செப்டம்பர் 2024, 4:33 am IST
ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பகுதியை பொக்லைன் மூலம் இடித்த பொதுப்பணித் துறையினா்.
பகிர்:

குலசேகரம் அருகே கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டின் முன்பகுதியை பொதுப்பணித் துறையினா் இடித்து அகற்றினா்.

குலசேகரம் அருகே கோதையாறு இடதுகரை கால்வாயின் கரையில் மங்கலம் முதல் பொன்மனை வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவுப்படி பொதுப்பணித்

துறையினா் மங்கலம் முதல் சுமாா் 1 கி.மீ. தூரம் வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 18 வீடுகளின் சுற்றுச் சுவா்கள் மற்றும் ஒரு வீட்டின் முன்பகுதியை புதன்கிழமை இடித்து அகற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments