நாகா்கோவிலில் நாளை மீனவா்கள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மீன்வளம்- மீனவா் நலத் துறை, இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய தங்களது குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை மீனவா்கள் இக்கூட்டத்தில் வழங்கலாம்.
பிற அரசுத் துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித்தனி மனுக்களாக வழங்க வேண்டும். மீனவா்கள், மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்றாா் அவா்.