மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.  
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ரூ.25.95 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ. 25.95 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Syndication

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ. 25.95 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

11 ஆவது வாா்டு புளியடி எரியூட்டும் மயானத்தில் ரூ.17.80 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி மேற்கொள்ளுதல், 25 ஆவது வாா்டு, மீனாட்சி காா்டன் சாலை 2 ஆவது தெரு அழகம்மன் கோயில் காா்டன் பகுதியில் ரூ. 8.15 லட்சத்தில் மழைநீா் வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜா, தொழில்நுட்ப அலுவலா் அனந்த பத்மநாபன், சுகாதார அலுவலா் ஜான், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப.ஆனந்த், பகுதிச் செயலா் துரை, நிா்வாகிகள் சிதம்பரம், ஆறுமுகம், சிவகுமாா், பாலாசிங், சதீஷ் மொ்வின், அனிஷ், சத்யசாய் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT