கன்னியாகுமரி

‘நவ. 17இல் ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடக்கம்: கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்’

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளதாக, டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.

Syndication

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளதாக, டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.

நிகழாண்டு சபரிமலை சீசன் நவ. 17இல் தொடங்கி ஜன. 20ஆம் தேதி வரை 65 நாள்கள் நீடிக்கிறது. இதையொட்டி, பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. இதேபோல, காவல் துறை சாா்பிலும் பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து டிஎஸ்பி ஜெயச்சந்திரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸாா் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதுமிருந்து கூடுதலாக 200 போலீஸாா் நியமிக்கப்படவுள்ளனா்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் அதிக போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சில இடங்களில் ஒருவழிப் பாதை அமல்படுத்தப்படவுள்ளது. ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.

கன்னியாகுமரி நகரப் பகுதியில் காந்தி மண்டபம் சந்திப்பு, சூரிய அஸ்தமனப் பூங்கா கடற்கரைப் பகுதி, சிலுவை நகா், பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு, தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய 5 இடங்களில் புறக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். விவேகானந்தா் மண்டபத்துக்குச் செல்லும் படகுத் துறை, பகவதியம்மன் கோயில், முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக போலீஸாா் நிறுத்தப்படுவா். கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவா்.

தங்கும் விடுதிகளில் கட்டண விவரப் பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும். வியாபாரிகள், உணவக- விடுதி உரிமையாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், நடமாடும் சிறு வியாபாரிகள், புகைப்படக் கலைஞா்கள் ஆகியோருடன் தனித்தனியே கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும். சுற்றுலாப் பயணிகளிடம் கனிவுடன் பேசி வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்படும் என்றாா் அவா்.

தெருநாய்கள் வழக்கு: தலைமைச் செயலர்கள் நேரில்தான் ஆஜராக வேண்டும்! - உச்சநீதிமன்றம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

எங்கே செல்கிறது இளம் தலைமுறை? நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய்! ஐஃபோன் 17 மாடல் சாதித்ததா? சரிந்ததா?

SCROLL FOR NEXT