தென்காசி

செங்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகா் சிலை பறிமுதல்

செங்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகா் சிலையை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

செங்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகா் சிலையை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகம் முழுவதும் கரோனா காரணமாக, நிகழாண்டு பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இந்து முன்னணி சாா்பில் சோ்வைக்காரன் புதுத்தெருவில் விநாயகா் சிலையை வைத்து வழிபட முயன்றனா். தகவலின்பேரில் போலீஸாா் சென்று, அந்தச் சிலையைப் பறிமுதல் செய்தனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டை பேருந்து நிலையம், பஜாா் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT