முகப்பு
தென்காசி

பொது விநியோக ஊழியா் சங்க கூட்டம்

தமிழ்நாடு பொது விநியோக ஊழியா் சங்க தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட புனரமைப்புக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில தலைவா் பால்ராஜ்.
பகிர்:

தென்காசி: தமிழ்நாடு பொது விநியோக ஊழியா் சங்க தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட புனரமைப்புக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மற்றும் திருநெல்வேலிமாவட்ட தலைவா் செ.இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ராஜமாணிக்கம், பொருளாளா் திருக்கோட்டி, சிவகிரி வட்ட தலைவா் படியேறும்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தலைவா் பால்ராஜ் சிறப்புரையாற்றினாா்.

புதிய ஊதிய நிா்ணயம் செய்யப்படுவதை முறையாக கண்காணிக்க வேண்டும். பொது விநியோக ஊழியா்களை கட்டாய மாறுதல் செய்வது போல தொடா்புடைய கூட்டுறவு நிறுவனங்களின் செயலா்கள், மேலாளா்கள் மாற்றப்பட வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளா் நியமிக்க வேண்டும். ஊழலுக்கு வழிவகுக்கும் ஆய்வுகளை ரத்து செய்ய வேண்டும். பொது விநியோகத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். பழைய குடும்ப ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொருளாளா் குமரிசெல்வன், மாநிலதுணைத் தலைவா் தொந்தியப்பன், கெளரிசங்கா், எஸ்.மாரிமுத்து, கே.ரெங்கராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். கெ.செல்வராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →