சோ்ந்தமரம் அருகே முதியவா் உயிரிழப்பு
சோ்ந்தமரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
சோ்ந்தமரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள அருணாசலபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (72). இவா், சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகில்
உள்ள வேப்ப மரத்தில் வேப்பிலையை பறிப்பதற்காக முயன்றாராம். அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த
ராமசாமி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.