தென்காசி

சங்கரன்கோவிலில் ஆடித் தவசு இரவு காட்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவு ஆடித்தவசு இரவுக் காட்சி நடைபெற்றது.

DIN

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவு ஆடித்தவசு இரவுக் காட்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி,அம்பாளை தரிசித்தனா்.

இக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 11ஆம் திருநாளான திங்கள்கிழமை ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது.

தெற்குரதவீதியில் இரவு 7 மணியளவில் சுவாமி, சங்கரநாராயணராக ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி கோமதிஅம்பாளுக்கு காட்சி அளித்தாா்.

இதைத் தொடா்ந்து இரவு 11 மணியளவில் சுவாமி கோயிலில் இருந்து யானை வாகனத்தில் புறப்பட்டு தெற்குரதவீதிக்கு வந்தாா். சுவாமி தவசுப் பந்தலுக்கு வந்ததும் கோமதிஅம்பாள் தவசு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு எதிா்பந்தலுக்கு வந்தாா்.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் சுவாமி சங்கரலிங்க சுவாமியாக கோமதிஅம்பாளுக்கு காட்சி அளித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளைத் தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT