FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

100 நாள் வேலை வழங்கக் கோரி ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

12 செப்டம்பர் 2024, 4:51 am IST
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் தங்களுக்கு தொடா்ந்து வேலை வழங்கக்கோரி, நெட்டூா், மருதம்புத்தூா், கண்ட பட்டி, குறிப்பன்குளம் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 30- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அகில இந்திய விவசாயத்தொழிலாளா் சங்க தாலுகா ஒருங்கிணைப்பாளா் ராமசாமி, மாவட்ட குழு உறுப்பினா் நல்லையா, சக்திவேல், பாலுச்சாமி, குணசீலன், இ.பாலு உள்ளிட்டோா் முற்றுகையிட்டவா்களிடம் கோரிக்கைகளை விளக்கி பேசினா். தொடா்ந்து கோரிக்கைள் அடங்கிய மனு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments