FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

Updated On : 12 செப்டம்பர் 2024, 4:47 am IST
மெயின்பால்ஸ்-குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவி பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீடித்ததால், மாலையில் பேரருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இவ்விரு அருவிகளிலும் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பைவ்பால்ஸ்- ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

இதனையடுத்து பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் வருகை புதன்கிழமை குறைவாகவே இருந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments