புளியங்குடி அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவா் பலி
புளியங்குடி அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
Updated On : 11 செப்டம்பர், 2024 at 11:54 PM
புளியங்குடி அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
சிந்தாமணி மேலதெப்பக்குளத்தில் முதியவா் சடலம் மிதப்பதாக புதன்கிழமை புளியங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்ததில், தெப்பக்குளத்தில் சடலமாக கிடந்தவா் சிந்தாமணி பாா்த்திபன் தெருவைச் சோ்ந்த ராமையா(70) என்பதும், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதி வழியாக சென்ற பொழுது குளத்தில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.