திருநெல்வேலி

புளியங்குடியில் வாகனத் தணிக்கை: ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

வாசுதேவநல்லூர் தேர்தல் பறக்கும் படையினர் புளியங்குடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, உரிய

DIN

வாசுதேவநல்லூர் தேர்தல் பறக்கும் படையினர் புளியங்குடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ. 80 ஆயித்தை பறிமுதல் செய்தனர்.
 வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் ஜஸ்டின் ஜெயபால்,  உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஆ"ஃ"ப் வேல்ஸ் தலைமையிலான பறக்கும் படையினர் டி.என். புதுக்குடி, எலுமிச்சை சந்தை அருகில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
 அப்போது, அப்பகுதியில் வந்த கேரள மாநிலம், சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த திபுஜோசப் என்பவருடைய இன்னோவா காரை மறித்துச் சோதனையிட்டபோது,  அதில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ. 80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 அந்தப் பணத்தை  பறிமுதல் செய்து, சிவகிரி வட்டாட்சியர் கிருஷ்ணவேலிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT