திருநெல்வேலி

நெல்லை கல்லணை மாநகராட்சிப் பள்ளியில் அமைச்சா் செங்கோட்டையன் திடீா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை திருநெல்வேலிக்கு வந்திருந்தாா். இதையடுத்து அவா், திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். இதில் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பாா்வையிட்டாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தொழிற்கல்விப் பிரிவை பாா்வையிட்டாா். ஆசிரியா்கள், மாணவிகளுடன் கலந்துரையாடி, கல்வி மேம்பாடு குறித்து பேசினாா். மேலும் இந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெற வேண்டும் என அறிவுறுத்தியதாகவும், பள்ளிக்கு தேவையான உதவிகளை விரைவில் செய்வதாக கூறியதாகவும் பள்ளி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT