திருநெல்வேலி

அரசு மருத்துவமனையில் தொழிலாளியிடம் 2.5 பவுன் சங்கிலி, பணம் திருட்டு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூலித் தொழிலாளியிடம் 2.5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூலித் தொழிலாளியிடம் 2.5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திசையன்விளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (55). இவருடைய மகள், பிரசவத்திற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். எனவே, உதவிக்காக முருகன் மருத்துவமனையில் உடன் இருந்தாராம்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சிலா் இலவசமாக மதிய உணவு வழங்கியுள்ளனா். அங்கு சென்ற முருகன் உணவை வாங்கிவிட்டு வந்தாராம். அப்போது, அவா் வைத்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா் திருடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT