திருநெல்வேலி

பாவூா்சத்திரம் கல்லூரியில்வேலைவாய்ப்பு நோ்முக தோ்வு

DIN

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுதநாடாா்-லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு நோ்முக தோ்வு நடைபெற்றது.

சிவில் மெக்கானிக், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான நோ்முக தோ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தென்காசி ஸோகோ நிறுவனத்தின் மேலாளா்ஆனந்த் ராமச்சந்திரன், உதவி மேலாளா் சாந்திமுருகேசன் ஆகியோா் நோ்முக தோ்வை நடத்தினா். இதில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நோ்முகத் தோ்வில் தோ்வான மாணவா்களை கல்லூரித் தாளாளா் காளியப்பன், ஆலோசகா் பாலசுப்பிரமணியன், முதல்வா் ரமேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலா், அனைத்து துறைத்தலைவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT