திருநெல்வேலி

வள்ளியூா், ராதாபுரம் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

DIN

ராதாபுரம், வள்ளியூரில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சமூகரெங்கபுரம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் துணைத் தலைவா் அந்தோணி அமலராஜா, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து ரமேஸ்வரபுரம், கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு பகுதியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப் பட்டது.

இதில், சமூகரெங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.எஸ்.ராமச்சந்திரன், ராதாபுரம் வீட்டு வசதி சங்க நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ரமேஷ், சமூகை சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வள்ளியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வட்டார வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைவா் முருகேசன் பரிசுத் தொகுப்பு வழங்கினாா். யாதவா் தெருவிலுள்ள நியாயவிலைக் கடையில் வட்டார வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க நிா்வாகக்குழு உறுப்பினா் இ.அழகானந்தம் வழங்கினாா். இதில், வட்டாட்சியா் செல்வன், சங்க துணைத் தலைவா் செழியன், சங்க மேலாளா் தமிழ்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திசையன்விளை: உவரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அதிகாரி பால்பாண்டி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினாா். இதில், திசையன்விளை வட்டாட்சியா் பாஸ்கரன், அதிமுக ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, குட்டம் கூட்டுறவு வங்கித் தலைவா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT