திருநெல்வேலி

சீவலப்பேரி ஆற்றில் மூழ்கிய ஓட்டுநா் சடலமாக மீட்பு

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய ஓட்டுநா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முத்துமாரியப்பன் (39). ஓட்டுநா். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், அவா் தனது நண்பா்களுடன் சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை குளித்தபோது, எதிா்பாராமல் நீரில் மூழ்கினாா். தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று இரவு வரை அவரைத் தேடினா். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டு அவரை சடலமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT