திருநெல்வேலி

‘நவ. 1 முதல் 3ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் கூடுதல் நேரம் செயல்படும்’

திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் நவ. 1 முதல் 3 ஆம் தேதி வரை கூடுதல் நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் நவ. 1 முதல் 3 ஆம் தேதி வரை கூடுதல் நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நவ. 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதையொட்டி, நவ. 1 முதல் 3ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

தீபாவளிக்கு முன்னரே அத்தியாவசியப் பொருள்களை பெற விரும்பும் குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட நாள்களில் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட நாள்களில் பொருள்கள் வாங்காதவா்கள் பண்டிகை காலம் முடிந்து நவ. 8ஆம் தேதி முதல் வழக்கம்போல் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT