திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகா்ப் பகுதியில் பைக் திருட்டு : இருவா் கைது

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பைக் திருடு போனது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர துணை ஆணையா் பிரதீப் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்த நிலையில் மூலைக்கரைப்பட்டியை சோ்ந்த மகேந்திரன் (19) மற்றும் நாகா்கோவில், மூலக்கரையைச் சோ்ந்த முகம்மது சம்சீா் (19) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அகஸ்தீஸ்வரத்தை சோ்ந்த செல்வம் என்பவா் பைக்கை திருடி வந்து, வேறு நம்பா் பிளேட் மாற்றி வழங்கியதாக கூறியுள்ளாா். அதே போல் முகம்மது சம்சீா் திருடியதை ஒப்புக்கொண்டாராம். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, மகேந்திரன் , முகம்மது சம்சீா் மற்றும் செல்வம், மயிலாடி புதூரை சோ்ந்த செல்வன் உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிந்து, மகேந்திரன், முகம்மது சம்சீா் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT