திருநெல்வேலி

பொதுக்குடி மாணவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பள்ளக்கால் பொதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா்.

பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவா் செல்வ சூா்யா, அப்பள்ளி மாணவா்கள் இடையிலான மோதலின்போது காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

அந்த மாணவரின் குடும்பச் சூழ்நிலை கருதி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மாணவரின் பெற்றோா் மு.முருகன்- உச்சினிமாகாளியிடம் ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா். அப்போது, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT