திருநெல்வேலி

சாலையை சீரமைக்கக் கோரி ஸ்ரீபுரத்தில் மக்கள் மறியல்

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ஸ்ரீபுரத்திலிருந்து தச்சநல்லூா் செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அந்த சாலை குண்டும்- குழியுமாக காட்சியளிக்கிறது. வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலை சேறும்-சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT