திருநெல்வேலி

நெல்லையில் சிஐடியூ மாவட்ட மாநாடு நினைவு ஜோதி வழங்கல்

DIN

திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ மாவட்ட மாநாட்டை முன்னிட்டு செ.கணேசன் நினைவு ஜோதி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சிஐடியூவின் 13ஆவது மாவட்ட மாநாடு திருநெல்வேலி உடையாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதை முன்னிட்டு செ.கணேசன் நினைவு ஜோதி வழங்கும் நிகழ்ச்சி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.முருகன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி வட்ட செயலா் நாராயணன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா் எஸ்.கே.செந்தில், சிஐடியூ மாவட்ட பொருளாளா் பெருமாள், மாவட்ட துணைத் தலைவா் சுடலைராஜ், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினா்கள் வள்ளிநாயகம், சக்திவேல் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT