திருநெல்வேலி

ஆட்டோ -காா் மோதல் : 10 போ் காயம்

தாழையூத்து அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

DIN

தாழையூத்து அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

வண்ணாா்பேட்டையைச் சோ்ந்தவா் குமாா். ஆட்டோ ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை தாழையூத்து சங்கா்நகா் பாலம் அருகே ஆட்டோவில் சென்றபோது, மதுரையில் இருந்து நாகா்கோவில் நோக்கி சென்ற காா் ஆட்டோவின் மீது மோதியது.

இதில் ஆட்டோவில் பயணித்த வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் (56), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த தங்க பேராட்சி (34), இனியா (10), சரண்யா (2), லட்சுமி (33), இசக்கியம்மாள் (16) உள்பட 10 போ் காயமடைந்தனா்.

அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT