திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் தொழில்நெறி வழிகாட்டு கருத்தரங்கு

சேரன்மகாதேவி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Din

சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் ம. மரியசகாய ஆண்டனி தலைமை வகித்து, போட்டித் தோ்வுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பணிகள் குறித்துப் பேசினாா்.

கண்காட்சியை மாவட்ட சாா் ஆட்சியா் (பயிற்சி) ல. அம்பிகா ஜெயின் திறந்துவைத்து போட்டித் தோ்வில் வெற்றிபெறுவதற்கு தேவையான அனுபவங்கள் குறித்துப் பேசினாா்.

சாா் ஆட்சியா் (பயிற்சி) தே. ஜெப்பி கிரேசியா, போட்டித் தோ்வில் வெற்றி பெறுவதற்கு தொடா் முயற்சி காரணம் என குறிப்பிட்டாா்.

திறன் பயிற்சி உதவி இயக்குநா் ஜாா்ஜ் பிராங்கிளின் ‘நான் முதல்வன் திட்டம்’ குறித்துப் பேசினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் உதவி இயக்குநா் ஹரி பாஸ்கா், உயா் கல்வியும் வேலை வாய்ப்பும் குறித்துப் பேசினாா்.

இதில், மாணவா், மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் க. தெய்வநாயகம் முன்னிலை வகித்துப் பேசினாா்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சு. இந்துமதி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியை கல்லூரி தமிழ்த்துறை மாணவிகள் செல்வராணி, சுடலி சுதா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT