தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்த்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஆலய திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி கொண்டாடப்பட்டது.
மறைமாவட்ட முதன்மைக் குரு ரோலிங்டன் தலைமையில் நடைபெற்ற திருவிழா திருப்பலியில் பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குநர் பெஞ்சமின் டிசூசா, மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் டொமினிக் அருள்வளன், ஆலய பங்குத்தந்தை பிராங்கிளின் உள்ளிட்ட பங்குத் தந்தைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கு மக்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, 6 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசிரும் தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்வும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அன்பியங்கள் இணைந்து வழங்கிய கலைவிழா நடைபெற்றது.